மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைய உள்ள புதிய உயர் ரக மேம்பாலத்தில் செல்லூர் வழியாக செல்லும் பாதையில் தூண்கள் அமைய உள்ள எம் எம் லாட்ஜ், பாலம் ஸ்டேஷன் ரோடு, புது பாலம் ஜங்ஷன் சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கான மாற்று பாதைகள் மற்றும் தடுப்புக்கள் அமைய உள்ள பகுதிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு J.லோகநாதன் IPS அவர்கள் பார்வையிட்டார்.
உடன் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திரு.சந்திரன் அவர்கள், உதவி பொறியாளர் திரு.ராஜாராம் மற்றும் பி.கே.எம்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தினரும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.குமார், உதவி ஆணையர் திரு.மாரியப்பன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்வில் காவல்துணை ஆணையர் தலைமையிடம் திரு.மங்களேஸ்வரன், காவல் துணை ஆணையர் தெற்கு திரு.பாலாஜி மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.