தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

Madurai Minutes
0

மதுரை மாநகர  போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் தலைமை தாங்கி, சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சல் பைகள் வழங்கியும், பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.


பேரணியில் போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார், பொறுப்பு காவல் கூடுதல் காவல் ஆணையர் திரு திருமலை குமார் மற்றும் உதவி ஆணையாளர்கள் திரு செல்வம், திரு மாரியப்பன் மற்றும் போக்குவரத்து கழக கூடுதல் போக்குவரத்து ஆணையர் திரு.வி சத்ய நாராயணன் மற்றும் மதுரை வடக்கு RTO திருமதி. R.சித்ரா, மதுரை south RTO திரு. சிங்காரவேலு, மதுரை வாடிப்பட்டி மேலூர் வடக்கு தெற்கு மத்திய பகுதி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மாநகர போக்குவரத்து காவல் நிலைய காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை காவலர்கள் 100 பேர், மதுரை மாவட்ட வாகன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் டூவீலர் மெக்கானிக் அசோசியேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 400 பேர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !