முதலீட்டாளர்களுக்கு வணிகத்தை எளிதாக்க சிடிஎஸ்எல்-ன் பல மொழி முன்முயற்சிகளை செபி தலைவர் துவக்கி வைத்தார்

Madurai Minutes
0

வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஆசியாவின் முதல் பட்டியலிடப்பட்ட டெபாசிட்டரியான சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், உள்ளடக்கம் மற்றும் அணுகுதலுக்கான அதன் உறுதிப்பாட்டை குறிக்கும் வகையில் மூலதன சந்தை நிலப்பரப்பில் இரண்டு தனித்துவமான பல மொழி முன்முயற்சிகளை தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது.  இந்த முன்முயற்சிகளை செபி தலைவர் மாதபி பூரி புச் 17 ஜனவரி 2024 அன்று நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.


முதலீட்டாளர் சிஏஎஸ்-ல் புரட்சிகரமான மேம்படுத்தலை சிடிஎஸ்எல் அறிமுகப்படுத்துகிறது, முதலீட்டாளர்கள் 23 இந்திய மொழிகளில் இருந்து தங்கள் விருப்பமான மொழியில் தங்கள் அறிக்கைகளைப் பெற உதவுகிறது. இந்த ’அப்கா சிஏஎஸ் - அப்கி ஜுபானி’ முன்முயற்சியானது, எளிதாக அணுகுவதற்கான ஒரு சான்றாகும், முதலீட்டாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மொழியில் டிமேட் கணக்கில் வைத்திருக்கும் பத்திரங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பார்வையை வழங்குகிறது.  சிடிஎஸ்எல் இணையதளத்தில் உள்ள தனித்துவமான பல மொழி சாட்பாட். ’சிடிஎஸ்எல் பட்டி சஹய்தா 24*7,' முதலீட்டாளர்களின் பயணங்களை 'ஆத்மநிர்பர்தா' அல்லது தன்னிறைவு நோக்கி எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது நான்கு மொழிகளில் ஆதரவை வழங்குவதன் மூலம், சாட்பாட் ஒரு நிலையான துணையாக மாறி, எங்களின் பத்திரச் சந்தைகளின் நுணுக்கங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு 24 மணிநேர உதவியை வழங்குகிறது.


சைபர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் கல்வியறிவு ஆகிய துறைகளில் சந்தை விழிப்புணர்வை ஆழப்படுத்த சிடிஎஸ்எல் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.   அறிவுசார் கூட்டாளிகளான கேபிஎம்ஜி உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, சிடிஎஸ்எல்-ன் சைபர் செக்யூரிட்டி சிம்போசியத்தில் இருந்து சமீபத்தில் நடைபெற்ற முக்கிய அம்சங்களின் தொகுப்பாகும். அதன் 25-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிடிஎஸ்எல் வெற்றிகரமாக 'நீவ்' பிரச்சாரத்தை முடித்து, 25 நகரங்களில் நிதி கல்வியறிவைப் பரப்பியது.


வெள்ளி விழா நிகழ்வில் பேசிய எம்டி அண்ட் சிஇஒ நேஹல் வோரா, “எங்கள் பயணத்தின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த நேரத்தில், செபி தலைவர் சிடிஎஸ்எல்-ன் முக்கிய முயற்சிகளை துவக்கி வைப்பதைக் காண்பது எங்களுக்கு பெருமையாகும். எங்களின் சமமரியாதை எனும் முக்கிய மதிப்பின் வழிகாட்டுதலால், இந்த புதிய வெளியீடுகள் எங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.  ஒவ்வொரு முதலீட்டாளரையும் சமமான முறையில் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, தளங்களுக்கு பாதுகாப்பான அணுகலை வலுப்படுத்துவது, திறமையான நிதிக் கல்வி மற்றும் மொழித் தடைகளைத் தாண்டிய கருவிகள் மூலம் தன்னிறைவை அடைய முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது போன்றவற்றில் ஈடுபடுவது ஆகியவற்றில் எங்கள் பார்வை தெளிவாக உள்ளது. நாங்கள் பேசும் ஒரே மொழி, உள்ளடக்கிய நம்பிக்கை, ஒரு ஒருங்கிணைந்த சிடிஎஸ்எல்-ஐ கற்பனை செய்வது, அங்கு எங்கள் நெறிமுறைகள் ஒருங்கிணைந்த நம்பிக்கையுடன் எதிரொலிக்கும்” என்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !