500 பனைவிதை, 1000 விதைப்பந்து நடும் பணியை துவக்கி வைத்த கிராம இளைஞர்கள் !

Madurai Minutes
0

மதுரை மாவட்டம் மேலூர் பழைய சுக்காம்பட்டியில் நேரு யுவகேந்திரா மற்றும் வின் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் இணைந்து பசுமை நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம் பழைய சுக்காம்பட்டியில் 500 பனை விதை விதைத்தல், 1000 விதைப்பந்து தூவ உள்ளனர்.  அதற்காக இன்று மாமரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தனர். 


விழாவில் பனைவிதை தொகுப்புகளை சமூக ஆர்வலர் அசோக்குமார் வழங்க, கல்லானை பசுமைக் குழு நிறுவனர் செல்வம் பெற்றுக்கொண்டார். மேலும் விதைப் பந்துகளை தூவி பல் மருத்துவர் நாகராஜ்  பல்பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடம் விளக்கி பேசினார். மேலும் பழையசுக்காம்பட்டி கிராமத்தில் சிறிய அளவு நூலகம் அமைக்கும் தீர்மானத்தை நாடக நடிகர் ஏ.வி.வாசுதேவன் வாசிக்க சமூக ஆர்வலர் செந்தில் மற்றும் வசந்தா பெற்றுக்கொண்டனர்.  


நிகழ்ச்சி நிறைவில் முதற்கட்டமாக 100 பனைவிதை விதைத்து, பனை மரத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு வின் ஸ்டார் இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !