கனரா வங்கியின் OBC ஊழியர்களின் மாநில கூட்டம் மதுரை VS செல்லம் சரஸ்வதி மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகர் திரு G V மணிமாறன் அவர்கள் தலைமையேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் சேர்மன் திரு. சங்கர், அகில இந்திய தலைவர். திரு. ஸ்ரீராம், தேசிய பொதுச்செயலாளர் திரு. குமார் கிராந்தி மற்றும் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஏழை குழந்தைகளின் கல்விக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய திருமதி. ஆயி பூரணம் அவர்களின் மகள் திருமதி. ஜனனி அவர்களின் நினைவாக "ஜனனி ஆயீ பூர்ணம் " என்ற பெயரில் 10 மற்றும் 11வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் கனரா வங்கியில் பணிபுரியும் OBC வகுப்பை சார்ந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் அறிவிப்பை சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் திரு.குமார் கிராந்தி வெளியிட்டார்.