மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சி மையத்தில் இன்று 29.02.2024 வியாழக்கிழமை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சியைநிர்வாக இயக்குனர் திரு. ஆ.ஆறுமுகம், அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வாய்ஸ் டிரஸ்ட் இயக்குனர் திரு.முருகேசன் அவர்கள் இயற்கை மருத்துவம் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார்.
மேலும் அரசு மருத்துவமனை யோகா மற்றும் நேச்சுரோபதி பிரிவு மருத்துவர் பிரித்திகா அவர்கள் நேச்சுரோபதி மற்றும் யோகா மூலம் மன அழுத்த நிவாரணம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
இவ்விழாவிற்கு திரு.இரா.பாஸ்கரன் இணை இயக்குனர் மக்கள் தொடர்பு துறை அவர்கள் வரவேற்று நிகழ்ச்சிகளை நடத்தினார்.
பொது மேலாளர் கூட்டான்மை திரு.சமுத்திரம் அவர்கள், பொது மேலாளர் மதுரை திரு ராகவன் அவர்கள், கோட்ட மேலாளர் கிழக்கு திரு.தயாள கிருஷ்ணன், உதவி மேலாளர் பணி திரு முருகேச பாண்டியன், உதவி மேலாளர் தகுதி சான்றிதழ் பிரிவு திரு. ராஜகுரு, உதவி மேலாளர் பயிற்சி மையம் திரு.ஆறுமுகசாமி, அனைத்து கிளை ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.