மத நல்லிணக்க பிரச்சார வாரம் அனுசரிப்பு

Madurai Minutes
0

 

தேசிய மத நல்லிணக்க அறக்கட்டளை சார்பாக நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை மத நல்லிணக்க பிரச்சார வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. 


இந்த பிரச்சாரத்தின் கடைசி நாளான நவம்பர் 25 அன்று நன்கொடை திரட்டப்படுகிறது. பல்வேறு விருப்பந்தகாத நிகழ்வுகளால் ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்ய இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மதுரை ரயில்வே சாரண, சாரணியர் அமைப்பு நன்கொடை வசூலித்தது. 


மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் முதல் நன்கொடை அளித்து அறக்கட்டளை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி மு.இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !