சென்னையில் 18-வது அனைத்து இந்திய சிட்டோ ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். 50 - 60 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மாணவர்களில் மதுரை மாவட்டம், திருமங்கலம், ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.பி.ஏ., ஏவியேசன் பயிலும் மாணவர் அப்துல் முத்தலிப் இந்திய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் இரண்டாமிடம் பெற்றார்.
இம்மாணவரை கல்லூரியின் தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், வணிக மேலாண்மை துறை இயக்குனர் நடேச பாண்டியன், டீன் நாசர், பி.பி.ஏ. ஏவியேசன் துறைத் தலைவர் கார்த்திகா மற்றும் பேராசிரியர்கள் அழகு லட்சுமி, திருப்பதி, விஷ்ணு, தமிழ் துறை தலைவர் முனைவர் முனியாண்டி, ஆங்கிலத் துறை தலைவர் ராஜ்குமார், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், தடவியல் துறை தலைவர் சீனிவாசன், கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா, ஃபயர் அண்ட் சேப்டி மேனேஜ்மென்ட் துறை தலைவர் சசிகலா, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ, வணிகவியல் துறை தலைவர் தனலட்சுமி, வரலாற்றுத் துறை தலைவர் மணிமேகலை, கணிதவியல் துறை பேராசிரியர் திலீபன், இயற்பியல் துறை பேராசிரியர் ஜஸ்டின், சமூகவியல் துறை பேராசிரியர் தங்கபாண்டி, பிரஞ்சு மொழித்துறை பேராசிரியர் கேசீன் நைஜீனியா, ஹிந்தி மொழி துறை பேராசிரியர் சுமதி, மலையாள மொழி பேராசிரியர் அகிலா, உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்குமார் மற்றும் நாராயண பிரபு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், ஜமால், அஜய், திவ்யநாயகி, தீபிகா, பத்மபிரியா, சரண்யா, ஆஃபரின் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் மாணவர் அப்துல் முத்தலிப்புக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.