தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். ரூபாய் 430 கோடி செலவில் நடைபெற்று வரும் மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மறு சீரமைப்பு பணிக்கான விளக்கப் படங்களை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்காமல் தவிர்க்க மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அவருடன் ஆய்வில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.