மதுரை
உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு மதுரை கோமதிபுரம் ஸ்ரீ செஸ்ட் இ.என்.டி.மருத்துவமனை சார்பில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளான
45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது, செல்லப் பிராணிகளை தவிர்ப்பது வாகன மாசுபாட்டை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தொடங்கி வைத்தார். பேரணி மருத்துவமனையில் தொடங்கி ஆவின் பால்பண்ணை அருகே நிறைவு பெற்றது. இதில் மருத்துவமனை ஊழியர்கள் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் பழனியப்பன் செய்திருந்தார்.