தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

Madurai Minutes
0

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (16.06.2023) மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


விடுதலைப் போராட்ட வீரரும் தலைசிறந்த நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் அவர்கள் சிவகாசியை சேர்ந்த சுப்பிரமணி பண்டிதர், ஞானம்மாள் தம்பதியினருக்கு 16.06.1886-அன்று பிறந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாழ்ந்து வந்தார். தேசபக்தி பாடல்கள் மற்றும் நாடகத்தின் மூலமாக பொதுமக்களிடம் தேசபற்றை ஊக்குவித்தார். தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 29 முறை சிறை சென்றுள்ளார். தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவில்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான  ஜீன் 16-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 137-வது பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சொ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்த நிகழ்வின்போது,  திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சாந்தி   அவர்கள்,  திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் திருமதி.ரம்யா முத்துகுமார் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலி தளபதி அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !