சபரிமலா ஐயப்ப சேவா சமாஜத்தின் அன்னதானம் மற்றும் சேவை பணிகளுக்கு உண்டான தேசிய கூட்டமானது ஈரோடு மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐயப்ப சேவா சமாஜம் தேசிய தலைவர் டி.பி சேகர் தலைமையில் நடைபெற்றது.
சபரிமலையை சுற்றி 32 இடங்களில் வரும் பாதையில் 120க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்த அமைப்பு அன்னதானம், மருத்துவம், குளியல், கழிவறை போன்ற வசதிகளுடன் ஐயப்ப சேவா கேந்திரம் என்ற பெயரில் தொண்டுகள் செய்து வருகிறது. அத்துடன் சபரிமலை சன்னிதானத்தில் மூலிகை குடிநீர் சுத்தம் சுகாதாரம் போன்ற சேவைகளும் செய்து கொண்டிருக்கிறது. இந்த சேவைகளை அதிகப்படுத்தி வடமாநில ஐயப்ப பக்தர்களுக்கும் அந்த பகுதியில் சேவைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. மலையை சுற்றி 32 இடங்களில் அன்னதானம் ஜனவரி 19ஆம் தேதி எரிமேலி மற்றும் சன்னிதானம் பகுதிகளில் ஸ்வச் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலாளர் எஸ். வினோத் குமார் அன்னதான கமிட்டியின் தேசிய சேர்மன் வி. கிருஷ்ணப்பா மாநில பொதுச் செயலாளர் ஜி.என்.ஜெயராம் ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர். மற்றும் ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த அன்னதான கமிட்டி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.