மதுரை புத்தகத் திருவிழா : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து உரையாற்றினார்

Madurai Minutes
0

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த விழா குறித்து எனக்கு முன் உரையற்றியவர்கள் எடுத்துரைத்து உள்ளார்கள்.


அனைவரும் கூறியது போல் புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் .


ஒரு வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. பல்கலை மாணவராக சேர்ந்த போதும் வெளிநாடு சென்ற போதும்  படித்ததை வைத்து அனைவரோடு இணைந்து பழக வேண்டும் எப்படி என்பதை உணர்த்தியது.  


எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை. பெரிய செல்வந்தராக இருந்து மறைந்தால் கூட நினைவு கூற ஆள் இல்லாத சூழ்நிலையில், திருவள்ளுவர் போன்றவர்கள் நீடித்து வரலாற்றில் யாரும் அழிக்க முடியாத பதிவை உருவாக்குவார்கள். யாருடைய எழுத்துக்கள் அப்படி நினைவில் இருக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.


பபாசி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கற்ற முறையில் இதனை நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.


இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி புதிய கருத்துக்கள் மற்றும் புதிய நோக்கங்களை உருவாக்க வேண்டும் எழுத்தும் கருத்தும் தான் சமூகத்தில் புதியவற்றை உருவாக்கும் கருவிகள் ஆகும்.


ஜெய்ப்பூரில் கலாச்சார இலக்கிய திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு 2024 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு இலக்கிய  திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.


ஜனவரிமாதம் அதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து சிறப்பான முறையில் நடத்திட ஏற்பாடு செய்வோம்


ஒரே மொழி ஒரே இனம் என 2000 ஆண்டுகளைக் கடந்து தொன்மை மாறாமல் வாழ்ந்து வரக்கூடிய மதுரை மண்ணிற்கு சொந்தக்காரர்கள் , இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தி இளைஞர்களும் அவர்தம் பெற்றோர்களும் திரளாக வருகை தந்து புத்தகத்தை தேடி படியுங்கள். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியையும் பாராட்டுகிறேன். உங்கள் வாழ்வை ஒளிமயமாக்க , கல்வி அறிவை மிகுதி படுத்திடும் வகையில் இது சமூகத்திற்கு உதவும் என்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !