உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற தேசிய சாக விழாவில் கலந்து கொண்ட அன்னை பாத்திமா கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்டு
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மற்றும் டாக்பதார் ஆகிய இடங்களில் இம்மாதம் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 30-வது தேசிய சாகச விளையாட்டு விழா நேஷனல் அட்வென்ச்சர் கிளப் சார்பில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடத்தப்பட்ட மலையேற்றம், பாறையேற்றம், பனிச்சறுக்கு, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 11 தேசிய சாகச விளையாட்டுக்களில் இந்திய அளவில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
இச்சாகச விளையாட்டுக்களில் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்தறை பேராசிரியரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான முனைவர் முனியாண்டி தலைமையில் பி.காம்., சி.ஏ. இரண்டாமாண்டு மாணவிகள் அபிநயா, விஷ்ணு பிரியா, உமாதேவி முதலாமாண்டு பி.காம். மாணவர் இராஜ கருப்பையா ஆகியோரும் கலந்து கொண்டு கல்லூரி திரும்பினர்.
இவர்களை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், வணிகவியல் துறை தலைவர் சமீம்பானு, பிற துறைத்தலைவர்கள் நடேச பாண்டியன், நாசர், பால்ராஜ், ராஜ்குமார், சீனிவாசன், எஸ். கார்த்திகா, ஆர். கார்த்திகா, மணிமேகலை, சுமதி, அகிலா, பிரெஞ்சு மொழி பேராசிரியர் கெசின், வணிகவியல் பேராசிரியர்கள் சகாய வாணி, தனலட்சுமி, முத்துலட்சுமி, கதிரேசன், சிவசுந்தரி, திலக வேணி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு, அலுவலக பணியாளர்கள் மாலதி, மேகலா, ஆஃப்ரின், பிரியங்கா மற்றும் சக மாணவ-மாணவியர்களும் வாழ்த்தினர்.