நேற்று (25-05-2024), திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் மற்றும் நாட்டு நல பணி திட்டம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சோழவந்தானில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வாடிப்பட்டி தாசில்தார் திரு.மூர்த்தி மற்றும் வாடிப்பட்டி உதவி தாசில்தார் திரு. தமிழ் எழிலன், சோழவந்தான் காவல்துறை அதிகாரிகள், சோழவந்தான் கிராம நிர்வாக அதிகாரிகள், விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் G.அசோக் குமார், முனைவர் K. ரமேஷ்குமார், முனைவர் G. ராஜ்குமார், ஸ்ரீ M. ரகு, முனைவர் N. தினகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் முனைவர். B. மாரிமுத்து, முனைவர். B. ராஜா, முனைவர். S. செல்வராஜ், முனைவர். V.குமாரசாமி மற்றும் முனைவர். S. எல்லைராஜா ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.
விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வுக்கான பாதகைகளை ஏந்தியபடி இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.