மதுரை கோச்சடை புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மதுரை சைபர் க்ரைம் காவலர்கள் மூலம் நடைபெற்றது . இந்நிகழ்வில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ராஜா சைபர் கிரைம் தகவல் தொழில்நுட்ப ஆய்வாளர் சதீஷ் சைபர் கிரைம் தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் நன்மைகள், அச் சாதனங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், சமூக வலைதளங்களை தவறான முறையில் பயன்படுத்துவதால் விளையும் தீமைகள், அதற்குரிய அரசின் சட்டங்கள் மற்றும் தண்டனைகளை குறித்து மாணவர்களிடம் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் கிறிஸ்டோபர், முதல்வர் மகிழ்ச்சி மன்னன், துணை முதல்வர் தாமஸ் செய்திருந்தனர்.
மதுரை கோச்சடை புனித ஜான்ஸ் பள்ளியில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
Tags