இந்தியர் என்பதே பெருமை எதிர்காலத் தலைமுறையும் இதனை மனதில் கொள்ள வேண்டும்

Madurai Minutes
0

 

இந்தியர் என்பதே பெருமை ; எதிர்காலத் தலைமுறையும் இதனை மனதில் கொள்ள வேண்டும் : காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் திரைக்கலைஞர் குஷ்பு சுந்தர்

 உலகில் எங்கே இருந்தாலும் இந்தியர் என்று சொல்கிற பெருமையை நாம் விட்டுவிடக்கூடாது, அதில் ஒரு துளியும் குறைந்து விடவும் கூடாது என்று திரைக் கலைஞர் குஷ்பு சுந்தர் கூறியிருக்கிறார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் குஷ்பூ சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த அவர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது மாண்புமிகு பிரதமரின் தாரக மந்திரமாக உள்ளது என்றார். காசியும் தமிழும் மிகவும் பிரபலமானது. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசுகிறார். தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்று அவர் கூறினார்

 இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறையக் கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்தத் தலைமுறைக்கும் தெரிவிப்பதாக அவர் கூறினார். 

முன்னதாக இந்த நிகழ்வில் திரைக் கலைஞர் குஷ்பூ சுந்தர் கௌரவிக்கப்பட்டார் உத்திர பிரதேச அமைச்சர் சஞ்சீவ் கோண்ட் உடன் இருந்தார்




Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !