மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாட்டாமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக நாட்டாமங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் மற்றும் விக்கிரமங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன் செயல்பட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் 650-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை செல்லம்பட்டி வட்டார கல்வி அலுவலர்கள் ரங்கநாயகி, அமலா எமரல்டா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயபாக்கியம், கலைத் திருவிழா பொறுப்பாசிரியர் பயிற்றுனர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்
0
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாட்டாமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக நாட்டாமங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் மற்றும் விக்கிரமங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன் செயல்பட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் 650-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை செல்லம்பட்டி வட்டார கல்வி அலுவலர்கள் ரங்கநாயகி, அமலா எமரல்டா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயபாக்கியம், கலைத் திருவிழா பொறுப்பாசிரியர் பயிற்றுனர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags