பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி திருமண விழா பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
0
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் அழகுராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், தலைமை தாங்கினார் மாவட்ட துணைத் தலைவர் பிரபு, முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர், மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் குரு, ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மணமக்கள் வீட்டார் சார்பாக அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சுந்தரராஜன், கண்ணன், பரணி, விஜி, பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Tags