மதுரை
நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் உள்ள மகிழ்ச்சி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி செயலாளர் சார்லஸ் தலைமை வகித்தார்.
தாளாளர் நித்யா தேவி,
முதல்வர் தமிழ்ச்செல்வி,
இணைச் செயலாளர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கெவின், ஜெனி ஆகியோர் பங்கேற்று கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளுடன் பாடல்கள் பாடி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் பள்ளி குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..