தெத்தூர் மேட்டுப்பட்டி உச்சி மாகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெத்தூர் மேட்டுப்பட்டி கிராமதில் உச்சி மாகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், புண்ணியாசனம், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.தொடர்ந்து இரண்டு கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வானத்தில் கருடன் வட்டமிட கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசத்தில்  

 


சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை தெத்தூர் மேட்டுப்பட்டி அகமுடையார் சமுதாயம், மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !