பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பணிகள் தொடக்கம்..
0
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிபாண்டியராஜன், தலைமையில் செயல் அலுவலர் பா.தேவி முன்னிலையில் அங்குள்ள வாடிவாசலில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சமலை சுவாமிக்கு மாலை அனுவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். ஜே.சிபி இயந்திரம் மூலம் ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதில் துணைத் தலைவர் ராமராஜன் மற்றும் கவுன்சிலர்களும் அரசு அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்..
Tags