மதுரை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் மற்றும் பொங்கல் தொகுப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒன்பதாம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சிக்குட்பட்ட நாகமலை புதூர் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஒன்றிய துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார் வழங்கினார்.
இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.