அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை..இந்திய மருந்து தொழில்முனைவோர் தீர்மானம்

Madurai Minutes
0


 மதுரையில் அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். மாநில பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ் ஆண்டறிக்கை வாசித்தனர். கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி தயாரிக்கபட்ட மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு சந்தைபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு செய்து இருந்தார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மருந்து தொழில் முனைவோர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !