பூலாங்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

Madurai Minutes
0

 



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி ஊராட்சியில் செயல்பட்டு வரும் வா.செ‌.சிவ.மீனாட்சி ஆச்சி துவக்க பள்ளியில் விளையாட்டு விழா, எண்ணும் எழுத்தும்  கொண்டாட்டம், ஆண்டு விழா என முப்பெரும் விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் முனியம்மாள் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் G.சந்திரகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பூலாங்குறிச்சி கலை கல்லூரி முதல்வர் ப.முத்துச்சாமி, பூலாங்குறிச்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.புஷ்பராஜ், நேவி ஆலோசனை அலுவலர் கே. கலைமணி, ராணுவ அதிகாரி பொன். பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து தொடக்கப்பள்ளி அலுவலர் மாணவ மாணவிகளே கல்வி குறித்தும் அதன் அவசியம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் நற்சான்றுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை முத்துமாரியம்மன் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஞானசேகர் நன்றியுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் ஆடல் பாடல்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்சுதாகர் மற்றும்  ஊர் முக்கியஸ்தர்கள் கிராம பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !