ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கலம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரம் ஆனது மணல்மேடு ஈ.வி.என் ரோடு பகுதியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை கொரடா திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர்.கோவி.செழியன். பாராளுமன்ற உறுப்பினர் சோ. இராமலிங்கம். வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே. சந்திரசேகரன். கும்பகோணம் அப. தமிழ்மகன்.மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக இப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.