ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சான்றோர் மக்கள் கட்சியின் வேட்பாளர் களம் காண்கிறார். அதன் பொருட்டு அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதது. சான்றோர் மக்கள் கட்சியின் சார்பாக எம் . கண்ணன் பிஏ. பிஎல் அவர்கள் சின்னமாக (தென்னந்தோப்புசின்னத்தில்)வேட்பாளராக களம் காண்கிறார். இதைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி செயலாளர் வெங்கடாசலம் சென்னிமலை நாடார் சங்கம் பொறுப்பாளர் திரு. கந்தசாமி சான்றோர் மக்கள் கட்சியின் நிறுவனர். மற்றும் பொதுச் செயலாளர் ஜி ராமச்சந்திரன். தேவர் சமுதாயம் சார்பாக பாலகுருசாமி. முதலியார் சங்கம் சார்பாக கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.