நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Madurai Minutes
0





மதுரை

நாகமலை புதுக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  யாகசாலை பூஜைகள்  ஆரம்பமாகி மண்டல பூஜை, கும்ப பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடாகி கோவிலை வலம் வந்து  ஸ்ரீதர் பட்டர், சங்கர் கணேச சிவம், நாகராஜன் ஸ்தபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர்கள் கோவில் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது‌. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 

இதில்  முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜ்,  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.சி.பி. ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்ப ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சிவகுமார் அறிவுறுத்தலின்படி சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !