மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டும் கிரேட் காளியா தன்னித்துரை ஆண்டனி, பிரகாஷ் நினைவாகவும் இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துராமன், செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான கவிதா ராஜா, துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பூங்கொடி பாண்டி, தமிழ்செல்வன், கழுவன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிடாய் ஜோடிகள் போட்டியில் பங்கு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டுக்கிடாய்களுக்கு பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது. மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குரும்பன் கோங்கு, நாட்டுகிடா, எட்டயபுரம் ரக கிடாய்கள் பங்கேற்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை உசிலம்பட்டி டி.எஸ்.பி.நல்லு தலைமையில் விக்கிரமங்கலம் செக்கானூரணி போலீசார் செய்திருந்தனர்.