மதுரை மாவட்டம்நாகமலை புதுக்கோட்டை
கேரன் மெட்ரிக் பள்ளி ஆசிரியை தனம் வரதன் எழுதிய தூரிகையின் தூவானம் நூல் வெளியீட்டு விழா நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பட்டியில் நடைபெற்றது. விழாவிற்கு திருமங்கலம் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகணேசன் தலைமை வகித்தார்.திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன், தொழிலதிபர் பழனிகுமார் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தொடக்க கல்வி அலுவலர் செல்வகணேசன் நூலின் முதல் பிரதியை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். உலக திருக்குறள் பேரவை செயலாளர் மார்ஷல் முருகன் நூல் அறிமுக உரையாற்றினார். முனைவர் ஜோவி நூல் மதிப்புரை வழங்கினார் கூடல் மலர் ஆசிரியர் அர்ச்சுனன், இலங்கை வானொலியின் முன்னாள் நாடக கலைஞர் சந்தப் பாவலன் எழில் வேந்தன், வளர்தமிழ் கலை இலக்கிய பேரவை நிறுவனர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் தனவரதன் ஏற்புரை வழங்கினார். விழாவில் பள்ளி இருபால் ஆசிரியர்கள் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.