புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

Madurai Minutes
0

மதுரை மாநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெருகிவரும் குற்றங்களை குறைக்கும் வகையிலும் மதுரை மாநகர் பகுதிகளான புதூர், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, மதிச்சியம், அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகலுக்கான அனைத்து மகளிர் காவல் நிலையம் அண்ணா நகரில் இன்று 30.06.2023 காலை 10 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு கா.ச. நரேந்திரன் நாயர் IPS., அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.திலகவதி (அனைத்து மகளிர் காவல் நிலையம் அண்ணா நகர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர்கள் திரு.பா. க. அரவிந்த் IPS  (வடக்கு) திரு.T. மங்களேஸ்வரன் (தலைமையிடம்),   திரு. செ. ஆறுமுகசாமி (போக்குவரத்து), காவல் உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன், (வரதட்சனை ஒழிப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திருமதி. திலகவதி அனைத்து மகளிர் காவல் நிலையம் அண்ணா நகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குழந்தைகள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !