மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Madurai Minutes
0

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில்  இன்று  (18.07.2023) நடைபெற்றது.    


மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல்  12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி விதிப்பு வேண்டி 22 மனுக்களும்,  காலிமனை வரி  வேண்டி 3  மனுக்களும், பாதாளச்சாக்கடை  வசதி  வேண்டி 5 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 5  மனுக்களும்,  குடிநீர் வசதி வேண்டி  10 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 8 மனுக்களும்,  சாலை வசதி வேண்டி 15  மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 4  மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும்  என மொத்தம் 75 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.   

தொடர்ந்து  மண்டலம் 3 வார்டு எண்.75 வெங்கடஜலபுரம் பகுதி அரிசி ஆலை அருகில் புதிதாக அமைக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை சீரமைப்பது குறித்தும் மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 


இம்முகாமில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் திருமதி.சுவிதா, திருமதி.பாண்டிச்செல்வி,  கண்காணிப்பு பொறியாளர் திரு.அரசு, துணை ஆணையாளர் திரு.தயாநிதி, உதவி ஆணையாளர் திரு.சுரேஷ்குமார்,  மக்கள் தொடர்பு அலுவலர்  திரு.மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் திரு.ஆறுமுகம், உதவி செயற் பொறியாளர் திரு.சேகர்,  சுகாதார அலுவலர் திரு.விஜயகுமார், உதவி  பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.   


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !