மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் இன்று (11.07.2023) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 9 மனுக்களும், பாதாளச் சாக்கடை வசதி வேண்டி 14 மனுக்களும், வருவாய் இனங்கள் தொடர்பாக 20 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 3 மனுக்களும், சுகாதாரம் வசதி வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 6 மனுக்களும் என மொத்தம் 54 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. தொடர்ந்து பழைய கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் திரு.டி.எம்.எஸ்.சௌந்திரராஜன் அவர்களுக்கு முழு திருவுருவச் வெங்கல சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில் மண்டலத் தலைவர் திரு.முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திரு.திருமலை, நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ்குமார், உதவி வருவாய் அலுவலர் திருமதி.சித்ரா, கண்காணிப்பாளர் திரு.வீரபாலமுருகன், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.