திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே இந்து முன்னணி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஆன்மீகச் செம்மல் மின்னல் கொடி தலைமை தாங்கினார் வத்தலகுண்டு நகர செயலாளர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், பாஜக மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கேஷ், தமிழ் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விஜய் கருணாநிதி என பலர் கலந்து கொண்டனர்.
இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேச இந்து முன்னணி உள்ளது என்றும் இந்துக்களின் உரிமையை மீட்க அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தெருமுனை விளக்க கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் பிரதீப் நன்றி கூறினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கூறும்போது ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், இந்துக்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்