மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

Madurai Minutes
0

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.


அதன்படி புதன் கிழமையான இன்று (30.08.2023) மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த மனுதாரர்கள் என மொத்தம் 46 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர்.J.லோகநாதன், IPS., அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். 


பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் உடன் உள்ளார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !