மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஜுவல் ஒன் ஷோரூம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கோலாகலமாக இன்று துவங்கியது.
திறப்பு விழாவினை மதுரை மாநகராட்சி மேயர் திருமதி வி. இந்திராணி அவர்கள் ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஜுவல் ஒன் நிறுவனத்தின் புதிய அறிமுகமான அமாரா கலெக்ஷன்ஸ், ஜுவல் ஒன் நியூ கலெக்ஷன்ஸ், பிரைடல் கலெக்சன், டைமண்ட் செக்சன் போன்ற பிரத்தியேக பிரிவுகளை முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இத்திறப்பு விழாவில் ஜுவல் ஒன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு கே சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் மதுரையின் முக்கிய பிரமுகர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.