மதுரை மேல அனுப்பானடி பகுதியில் நாம் இந்தியர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர் என். பி. ராஜா தலைமையில் நடைபெற்றது.
சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் என். பி. ராஜா ஜாதி, மத, பேதம் இன்றி மக்களுக்கு பாடுபடுவது, மாநில மொழி காப்பாது, இந்தி மொழி கற்பது, முதியோர்களை பாதுகாப்பது, விவசாயத்தை பாதுகாப்பது, சிறந்த பேச்சாளர்களை உருவாக்குவது, நேர்மையானவர்களை கொண்டு மக்களாட்சி ஏற்படுத்துவது, சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை வழங்குவது, இந்தியன் என்ற ஒருமைப்பாட்டுடன் வாழ்வது, போன்ற கட்சியின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசினார்.
விழாவில் தென்மண்டல செயலாளர் ராமச்சந்திரன், சங்கரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர பொறுப்பாளர் நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.