மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைககளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

Madurai Minutes
0

கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை  விஷால் டி மால்  ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன. 


இந்த கண்காட்சியை திரு.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் & திருமதி.பிரிஜெட் நிர்மலா, (தலைவர் செயின்ட் மைக்கேல் குழும நிறுவனங்கள்), திரு.தங்கபாண்டி & திருமதி.கிருத்திகா, (தலைமை நிர்வாக அதிகாரி ஆசிஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்),  திருமதி.சித்ரா குணசேகரன், (மேலாண்மை  இயக்குனர் சித்ரா ஏஜென்சி), ஆகியோர் துவக்கி வைத்தனர். இவர்களுடன் திரு.சுதிர் முகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), திரு.சிஹாபுதீன் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை மேல மாசி வீதி கிளை தலைவர்), திரு.நிஷாந்த்  (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் கிளை இணை  தலைவர்), ஆகியோர் உடனிருந்தனர். 


கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி செப்டம்பர் -09-2023 ஆம் தேதி முதல் செப்டம்பர்-17-2023 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 11 நாடுகளில் 325-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை  ஆகிய நகரங்களில் 24 கிளைகளை கொண்டுள்ளது..    


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !