விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 துணை வட்டாட்சியர்கள் வட்டாட்சியர் பதவி உயர்வு பயிற்சிக்காக தமிழக அரசு துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் காவல் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை பற்றி தெரிந்து கொள்வதற்காக நான்கு நாட்கள் சிறப்பு பயிற்சிமதுரை மத்திய சிறையில் நடைபெற்றது. இப்ப பயிற்சியில் கலந்து கொண்ட வட்டாட்சியர்கள் சிறை துறையின் செயல்பாடுகள் மற்றும் சீர்திருத்த பணிகள் பற்றி அறிந்து கொண்டனர்.
மேலும் சிறை நூலகத் திட்டம் மற்றும் சிறைவாசிகள் இசை பயிலரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு சிறைத் துறையில் சிறைவாசிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தப் பணிகள் குறித்து அறிந்து இன்று சுமார் 50 நூல்களை சிறை நூலகத்திற்கு வழங்கினார்.
மேலும் இசை பயிலரங்கத்தில் கலந்து கொண்டு தாங்களும் பாடல்களை பாடி சிறைவாசிகளை உற்சாகப்படுத்தினர்.