முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள சிறைவாசிகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் பெஸ்ட் அல்ட்ரா டென்டல் அண்ட் சயின்ஸ் கல்லூரி மூலமாக சிறைவாசிகளுக்கு பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் திரு பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.
பெஸ்ட் அல்ட்ரா டென்டல் அண்ட் சயின்ஸ் காலேஜை சேர்ந்த மருத்துவர் பழனி அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் 71 தண்டனை சிறைவாசிகள் மற்றும் 19 விசாரணை சிறைவாசிகள் ஆறு தடுப்பு சிறைவாசிகள் உட்பட மொத்தம் 100 நபர்களுக்கு பல் சொத்தை, பல் சுத்தம் செய்தல் மற்றும் பற்களில் நோய் உள்ளவர்களுக்கு பற்களை வேறோடு அகற்றியும் சிகிச்சை வழங்கப்பட்டது.