தமிழ் வளர்ச்சித் துறையின் குறள்பரிசுத் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் நிகழ்வு மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 03.02.2022 அன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த மதுரை கோச்சடை, குயின்மிரா சர்வதேசப் பள்ளியில் பயிலும் ந.அருள்பிரகாஷ் என்ற மாணவருக்குப் பரிசுத்தொகை (ரூ.15000/- காசோலை) பாராட்டுச்சான்றிதழ், அரசாணை ஆகியவை மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி மா.சொ.சங்கீதா இ.ஆ.ப அவர்களால் 05.09.2023 அன்று வழங்கப்பெற்றது. மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) முனைவர் ம.சுசிலா அவர்கள் உடனிருந்தார்.