தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆ. கொக்குளம் ஊராட்சியில் நடைபெற்றது.
முகாமிற்கு மதுரை மண்டல இணை இயக்குனர் நடராஜ் குமார் தலைமை வகித்தார். மதுரை, திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர்கள் பழனிவேலு, ரவிச்சந்திரன் மற்றும் கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கபி.காசிமாயன் தொடங்கி வைத்தார். முகாமில் காஷ்நடலகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, மலட்டு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முகாமில் செக்கானூரணி கால்நடை உதவி மருத்துவர் மாணிக் சுந்தர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி உதவி மருத்துவர் ஜான் சுரேஷ் தாசன், கால்நடை உதவி மருத்துவர்கள் கஜேந்திரன், கவுதமன், கீர்ததனா மற்றும் நோய் புலனாய்வு கால்நடை உதவி மருத்துவர் தாரணி, கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சுகந்தி பிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாசாணம், இளங்கோ, செந்தில், ராஜ்குமார், லதா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சிவபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்