மதுரை ஆனையூர் பகுதியை பிரபல தொழிலதிபர் பிரவீன் குமார் தனது அறக்கட்டளையின் மூலம் பெண்கள் முன்னேற்றம் , முதியோர் நலத்திட்டங்கள் என பல்வேறு விதமான வகைகளில் சமூக பணிகளை கடந்த 10 ஆண்டுக்களுக்கு மேலாக செய்து. பிரவீன் குமார் மேற்கொள்ளும் சமூக பணிகளை அங்கீகரிக்கும் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் டெல்லி சிறுபான்மையினருக்கான அமைதி குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உறுப்பினர் பதவியின் மூலம் டெல்லி சிறுபான்மையினர் நலன் சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளலாம் எனவும், டெல்லி சிறுபான்மையினருக்கான அமைதி குழுவின் உறுப்பினராக மூன்று ஆண்டுகள் வரை தொடலாம் எனவும் நியமன கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தொழிலதிபர் பிரவீன் குமார் சமூக சேவையை பாராட்டி டெல்லி சிறுபான்மையினர் அமைதி குழு உறுப்பினராக நியமனம் செய்தததற்கு சமூக ஆர்வலர்களின் பாராட்டியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.