திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையும், காளீஸ்வரி ரீபைனரிஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 'ஸ்மார்ட் செஃப்' சமையல் போட்டியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் மறைன் ஹாஸ்பிட்டாலிடி துறையைச் மாணவர்கள் 110க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரம் நடந்த இப்போட்டியில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, புலவு, சிக்கன் டிக்கா, சிக்கன் ஃபிங்கர்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பரிமாறப்படும் 120க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயார் செய்து காட்சிப்படுத்தினர். காளீஸ்வரி பைனரிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் மகேஸ்வரி, ஈவன்ட் மேனேஜர் சித்ரா ரத்தினவேலு ஆகியோர் மாணவ மாணவியர்கள் தயார் செய்திருந்த உணவு வகைகளை ருசி பார்த்தும், உணவு வகைகள் அலங்கரிக்கப்பட்ட விதத்தை பொருத்தும் பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
போட்டி ஏற்பாடுகளை ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ் தலைமையில் துறை பேராசிரியர்கள் விக்னேஸ்வர சீமாட்டி, செந்தில், அருண், கங்காதரன், செண்பகராஜ் ஆகியோர் செய்தனர்.