மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் நலனை முன்னிட்டு 22.03 2024 அன்று பிளாசம் (BLOSSOM) தொண்டு நிறுவனம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணைத்தலைவர் திரு த.பழனி அவர்கள் மற்றும் மதுரை மத்தியசிறை கண்காணிப்பாளர் திரு. மு.சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் ஹர்சினி மருத்துவமனை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் மதுரை பிளாசம் டிரஸ்ட் இயக்குனர் திருமதி. டி. மெர்சி அன்னபூரணி அவர்கள் காசநோய் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்களை வழங்கினார். பின்னர் மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு நிகழ்ச்சி மேலாளர் திரு. ஜெயபாண்டி அவர்கள் காசநோய் மற்றும் எச்ஐவி நோய் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். இம்முகாமில் 249 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் பங்கு பெற்று பயன்பெற்றார்கள்.