தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரைக்கு எரிபொருள் திறன் விருது

Madurai Minutes
0

2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும் சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும், சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அகில இந்திய அளவிலான “சிறந்த விருதுகளை” அறிவித்து விருதுகள் வழங்குவது வழக்கம்.


2022-2023 ஆம் ஆண்டிற்கான தேசிய பொது போக்குவரத்து திறன் மற்றும் எரிபொருள் திறனுக்கான 17 விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும் சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் சார்பாக நிர்வாக இயக்குநர் திரு.ஆ.ஆறுமுகம் அவர்கள் 15/03/2024 அன்று டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் ஸ்ரீ.அனுராக் ஜெயின் I.A.S., அவர்களிடமிருந்து விருது பெறப்பட்டது.


மேலும் 18.03.2024 அன்று சென்னையில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் போக்குவரத்துத் துறை திரு.K.பனீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். அவர்களிடம் வாழ்த்துகள் பெறப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !