74 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் பாலாபிஷேக நல்விழா

Madurai Minutes
0

மதுரை அனுப்பானடி வேளாளப்பெருமக்களால்   வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆறுமுகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் நடத்தி வரும் 74 ஆம் ஆண்டு  பாலாபிஷேக நல்விழா, பாலாபிஷேக விழா கமிட்டியின் தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகியோர் தலைமையில் அனுப்பானடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி பால்குடம் எடுத்து அனுப்பானடி நடுத்தெரு சித்தி விநாயகர் கோயில் ஆலயத்திலிருந்து பால்குடம்  புறப்பட்டு நடுத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு, சோனையா கோயில் தெரு வழியாக ஊர் சுற்றி திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்துவிட்டு, பெரிய ரத வீதியில் உள்ள அனுப்பானடி வேளாளப் பெருமக்கள் பொதுமடத்தில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் பாலாபிஷேக விழா கமிட்டியின் உறுப்பினர்கள் மற்றும் அனுப்பானடிவாழ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !