இன்று உலகம் முழுவதும் தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.குமரகுருபரன் அவர்கள் அறிவுரையின் பேரில், வலையங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தனசேகரன் அவர்களின் ஆலோசனையின்படி எலியார்பத்தியிலுள்ள அப்போலோ செவிலியர் பயிற்சி கல்லூரியில் தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். ஹெலன் M.பார்டிட்டா தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் திரு.கண்ணன் அவர்களும் இளநிலை பூச்சியியல் வல்லுநர் திரு.இராமு அவர்களும் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மண்டல பூச்சியியல் வல்லுநர் முனைவர்.ஜான் விக்டர் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாணவர்கள் டெங்கு சுகாதார உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.கோ.மணிகண்டன் நன்றியுரை தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் திரு.பெ.அழகுமலை, திரு.மு.பாலகிருஷ்ணன் மற்றும் திரு.நா.தினேஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.