காவல்துறை ஆளினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த பட்ட 'மகிழ்ச்சி ' திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாநகர, காவல்துறை தலைவர் திரு. லோகநாதன், இ. கா. பா., தலைமை ஏற்று, போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் மற்றும் மனநலம் மருத்துவர் Dr. C. ராமசுப்ரமணியன், ( State Nodal Officer, Police Well Being Program ) மற்றும் Dr. கண்ணன், ( State Assistant Nodal Officer, Police Well Being Program ) ஆகியோர் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதில் 70 கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள், மற்றும் செல்ல முத்து அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.