மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் உள்ள இல்ல வாசிகளின் நலனுக்காக பெங்களூரு தலைமை இடமாகக் கொண்ட பிரிசினர்ஸ் ஹோப் மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு .கே எம் .ரெஜி சாமுவேல் மற்றும் மதுரை எஸ்பி தோல் மருத்துவமனை மற்றும் ஜிவின் பல்நோக்கு பல் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள் இணைந்து நடத்திய சிறப்பு பொது மற்றும் தோல், பல், மருத்துவ முகாமினை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார் .
இதில் தண்டனை மற்றும் விசாரணை சிறை வாசிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.